கனோடெர்மா (ஆர்.ஜி

0 கருத்துகள்

கனோடெர்மா (ஆர்.ஜி) (ஜி.எல் )

கனொடெர்மா என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா, போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

கனோடெர்மா லூசிடம் (Ganoderma Lucidum) எனும் தாவரவியல் பெயரின் மூலம் அழைக்கப்படும் இந்த மூலிகையானது ஜப்பானியர்களால் ரிஷி (Reishi)என்றும் சீன மக்களால் லிங்சி (Ling Zhi) என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. லிங்சி எனும் சீன வார்த்தை நீண்ட ஆயுளைக் குறிப்பதாகும். இம் மூலிகையானது உடல் ஆரோக்கியத்தையும் நிண்ட ஆயுளையும் தருகிறது. கானோடெர்மாவில் 200 வகையான மருத்துவ சக்தி வாய்ந்த மூலக்கூறுகள் அமைந்துள்ளன. இது “மூலிகைகளின் அரசன்” எனவும் அழைக்கப்படுகின்றது.

சிறந்த ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தருவது. உடலின் சக்தியை அதிகரிக்கக்கூடியது.உடலில் இயற்கையாக அமைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும் நோயைக் குணமாக்கும் சக்தியையும் அதிகரிக்கிறது.உடலில் தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுப் பதார்த்தங்களை,உடலிலிருந்து வெளியேற்றும்.குருதியினால் கொண்டு செல்லப்படும் ஒட்சிசனின் அளவை கூட்டுவதினால் உடற்கலங்களினால்.மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதுடன் ஞாபகசக்தியையும் அதிகரிக்கும்.
உடற்கலங்களை இளமையாக வைத்திருக்கும்.உடலினால் ஊட்டச்சத்து அகத்துறிஞ்சப்படும் திறனை அதிகரிக்கும்.உடற்சமநிலையைப் பேண வல்லது.எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாதது.

கனோடெர்மாவானது இலகுவாக உள்ளெடுக்கக்கூடியதாக கப்சூல்ஸ் வடிவில் கிடைக்கிறது. இதனை ஏனைய மருந்துகளுடன் சேர்த்தும் பாவிக்கலாம். இவை 100% இயற்கைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது. எதுவித செயற்கை சுவைய+ட்டிகளோ நிறமூட்டிகளோ சேர்க்கப்படாதது. இவை சுகாதார கட்டுப்பாட்டின் கீழ் தயாரிக்கப்பட்டது. தரக்கட்டுப்பாடு ஐளுழு 9002, ஐளுழு 14001, வுபுயு மற்றும் ஹலால் ஆகிய சான்றிதழ்களையும் கொண்டுள்ளது. 

இவை இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, சிங்கப்ப+ர், மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா போன்ற 72 நாடுகளில் சந்தைப்படுத்தப்படுகின்றது. 

ரிஷி என்பது என்ன? 
உலகின் அனைத்து நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முதற்கொண்டே மூலிகைகளின் மூலம் நோய்களைக் குணமாக்கி வெற்றி கண்டுள்ளனர். இந்த மூலிகைகளின் மூலமாக நோய்களைக் குணமாக்குவதில் இந்தியா தலைசிறந்து விளங்கியது. இந்தியாவிற்கு இணையாக இன்றுவரை சீனர்களும், ஜப்பானியர்களும் மூலிகை மருத்துவத்திற்கு முதலிடம் கொடுத்து வருகின்றனர். இந்த மூலிகை வகைகளில் தலைசிறந்த ஒன்றுதான் ரிஷி என்கின்ற காளான் ஆகும். இதனையே மூலிகைகளின் அரசன் என்று அழைக்கின்றனர்.

38,000 வகை காளான்கள் மொத்தம் உள்ளன. 2000 வகை காளான்கள் மட்டுமே மனிதன் சாப்பிடத் தகுந்தவை.அதில் 200 வகை காளான்கள் மருத்துவத்தன்மை கொண்டவை.அதில் 6 வகை காளான்கள் நோய் தடுக்கும் சக்தியையும், 

நோய் தீர்க்கும். சக்தியையும் கொண்டவை இந்த 6 வகை காளான்கள் நோய் தடுக்கும் சக்தியையும் கொண்டவை.

இந்த 6 வகை காளான்களை ஜப்பானில் உள்ள கியோடோ பல்கலைக்கழகத்தில் 1972ல் தாவரவியல் ஆய்வாளர்கள் ஒன்று சேர்த்து ரிஷியை வெற்றிகரமாக பயிரிட்டனர். இதையே சீனர்கள் லிங்ஸ்சி என்றும், ஜப்பானியர்கள் கானோடெர்மா லூசிடம் என்றும் அழைக்கின்றனா

ரிஷி ஏன் தனிச் சிறப்பு பெற்றதாக உள்ளது?

ரிஷிசத்துணவு வகைகளில் ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. ர்pஷி மேற்கு, கிழக்கு நாடுகளில் கடந்த 5000 ஆண்டு கால அறிவு மற்றும் விவேகத்தின் சங்கமத்தில் பிறந்ததாகும். ஜப்பான், தாய்வான், சீனா,அமெரிக்கா, கனடா, போலந்து போன்ற நாடுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட நவீன அறிவியல் ஆய்வின் மூலமாக உயர்ந்த சக்தி வாய்ந்த மருந்தின் மாற்றாகவும், ஒரு சத்துணவாகவும் ரிஷியின் பயன்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. 5000 ஆண்டுகளாக பெறப்பட்டுள்ள அனுபவத்தின் அடிப்படையில் எந்தவித பக்கவிளைவுகளும் அற்றது ரிஷி என பாதுகாப்புடன் கூறலாம். இது அரிதாகவே கிடைப்பது என்பதால், பழங்காலத்தில் மாமன்னர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடியதாக இருந்துது. சீனாவின் முதல் மாமன்னரான ஷிஹீயான்தி என்பவர் 250 இளைஞர்களையும், 250 இளம் பெண்களையும் கொண்ட ஒரு படையினை காட்டிற்கு அனுப்பி, நீண்ட ஆயுளை அளிக்கக் கூடிய ரிஷியை தேடி கண்டுபிடித்து பயன்படுத்தினார்.

காட்டு ரிஷி என்பது மிகவும் அரிதானது. ஒரு காட்டில் ஒன்று அல்லது இரண்டு ரிஷி காளான்களை மட்டுமே காண இயலும். சீதோஷண நிலையாலோ, உயிரினங்களாலோ பாதிக்கப்பட்ட காட்டு ரிஷியின் தரம் எவ்வாறானது என கூற முடியாது. மேலும் காய்ந்த ரிஷி காளான்கள், புதிய ரிஷி காளான்களைப் போன்ற ஆற்றல் சத்துக்களை பெற்றிருக்காது. முதிர்வடைந்த பின் அதன் உடல் பகுதியின் தசைநார்கள் கடினமடைந்து விடுவதனால், ரிஷியில் உள்ள பயன்தரும் உயிர்ச்சத்துக்களைப் பிரித்தெடுத்து ஜீரணிப்பது மிகவும் கடினமானதாகும்.

காட்ட ரிஷியில் பயன்தரும் உயிர்ச்சத்துக்கள் இருந்தபோதும் ஒரு சிறிதளவு பயன்பெறுவதற்கு பெருமளவு ரிஷியை நமது முன்னோர்கள் பயன்படுத்த வேண்டியிரந்தது. இது பயிரிடப்பட முடியாது என்பதால், அரிதான இந்த ரிஷி காளான்கள் மாமன்னர்களுக்கு மட்டுமே கிடைப்பனவாக இருந்தன.

நவீன கால தபவரவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பொதுமக்களுக்கு பெருமளவில் ரிஷி காளான் கிடைக்க வகை செய்துள்ளது. சிறந்த சூழ்நிலைகளினாலும், போதுமான சத்துணவுகளாலும் ரிஷி தரமாக பயிரிடப்படுகிறது. குவனமாக பாதுகாப்பதன் மூலம் பயன்தரும் உயிர்ச்சத்தான மைசீலியம் மிக அதிகமாகக் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த மைசீலியம் எளிதாக ஜீரணிக்கப்படக் கூடியது. தசைநாரிலிருந்து எடுக்கப்படும் உயிர்ச்சத்து முற்றிலும் முழுமையானதாக இருப்பதுடன், எளிதில் ஜீரணிக்கக் கூடியதாகவும் உள்ளது. எனவே ரிஷியின் மருத்துவக் குணநலன்களைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அதிலிருந்து எடுக்கப்பட்ட மைசீலிய உயிர்சத்தின் மீதே மேற்கொள்ளப்பட்டன.

சிறந்த ரிஷி கேப்சூல்கள் தூய ரிஷி மைசீலியத்தில் இருந்து எடுக்கபட்ட உயிர்ச்சத்தினைக் கொண்டதாகும். தூய ரிஷி அதிக கசப்புச் சுவை கொண்டது. தற்போது ரிஷி கேப்சூல் வடிவங்களில் கிடைப்பதால் அதன் கசப்புச்சுவையை தவிர்க்க முடிவது. 

Share this article :

Jaffna Dxn

 photo siran20.gif
 
Saran: Creating Website |
Copyright © 2013. JaffnaDxn - All Rights Reserved